Sunday, May 13, 2007

அன்னையர் தினம்

இன்று அன்னையர் தினம் --> அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

எனது நலனில் அக்கறைகொண்டு வாழும் பல உயிர்களில் முதலாவது. எனக்காக எதையும் செய்வதுதாகாட்டும் (பிடித்த உணவு,எனது உடைகள் தேர்ந்துஎடுப்பது,அப்பாவிடம் எனக்காக வாத(சன்டையி)டுவது,இன்னும் பல.. ) அல்லது இரவு அலுவலகத்திலிருந்து எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தாலும் கூட மகன் சாப்பிட்டானோ இல்லையோ என்று அந்நேரதில் தோசை அல்லது வேறு எதேனும் செய்து தந்து, என்று எனக்காகவும் மற்றும் எனது தமக்கைக்காவே வாழ்பவர்.

அம்மா என்னை பொறுத்தவரையில் ஒரு சூப்பர்வுமன் காலையில் 4.30 எழுந்து எனது தங்கை கல்லூரி செல்லத்தயார் படுத்தி பின்னர் என்னை அலுவலகம் செல்லத்தயார் படுத்தி அனுப்பிய பின்னர் வீட்டு வேலைகளை முடித்து,நாள் முழுவதும் இரவு 11 மணி வரை உழைப்பவர்.இது மட்டும்மின்றி அதிகம் படிகாவிட்டாலும் எங்கள் வீட்டு நிதித்துரை திறம்பட நடத்துபவர், இன்று நாங்கள் கொஞ்சம் வசதியாக சொந்த வீடு என்று வசதியாக இருபத்தற்கு முதல் காரனமாக இருப்பவர்,என் தந்தையே அடிக்கடி நிதி விஷயத்தில் உன் அம்மாதான் பெஸ்ட் என்று கூறுவார், இப்படி பல பட்டியல் இடலாம்....

ஆனால் அவரை பொறுத்தமட்டில் இது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது.அவருக்கு பிள்ளைகள் மற்றும் கனவரின் நலன் மட்டும் தான் தெரியும்,அவர் இதுவரை எங்களை விட்டு ஒரு நாட்களுக்கு மேல் வெளியூர் சென்றது கிடையாது,ஒன்று போனால் எல்லோரையும் உடன் அழைத்து செல்வார் இல்லையெனில் செல்லவேமாட்டார்..

இது ஒன்றும் எனது அம்மாவிற்கு மட்டும் பொறுந்தாது, உலகில் உள்ள அனைத்து அம்மாவிற்கும் பொருந்தும், இருந்தாலும் என் அம்மா எனக்கு "தி பெஸ்ட்"

இப்படி பல விஷயங்களில் என்னை வியக்கவைக்கும் "என் அம்மாவிற்காக" இந்த பதிவு

அம்மா ... அன்னையர் தின வாழ்த்துக்கள் :)

No comments: